Tuesday, 20 September 2011

கவிதைகள்-சிலேடை


என் உதடுகளை,,

சிவப்பாக்கியவனே-நீ தான்...
 
இருந்தாலும்,,
 
இவ்வளவு நாகரிகம் கூடாதடா 

உனக்கு...
 
என் உதட்டில் படியும் கரையையும்,,
 
நாகரிகமாய் தட்டி விடுகிறாய்....
 
 
 
 
 
 
என் உடலை,,,
 
கட்டித் தழுவி முத்தமிடும்- நீ.... 

உன் மீதுள்ள ஆசையால்,, 

என் உதடுகள் 

உன் உதடுகளை நெருங்க,

தூக்கி எறிகிறாயே
 
 
 
       நியாயமா?????
 
 
 
                      வள்,

                           ******சிக'ரெட்'******

கூடங்குளம் போராட்டம் ...


கூடங்குளம் போராட்டம் ...
     
     வலிப்பு வந்தவன் கையில் கத்தியை தந்தது போல்,

     சாதாரண மீன் பிடிபவனுக்கு ,

    அனல் மீன் தந்து ,

    அடுத்தவர் குடிலில் விளக்கெரிய,

    தன் குடிக்கு புதைகுழி தோண்டாமல் இருக்க

                                     ஒரு போராட்டம் ...

வைராக்கியம்னா என்னங்க?


வைராக்கியம்னா என்னங்க?

                        பாருங்க , நேத்து வரைக்கும் ஊழல்  பத்தி பேசிட்டு இருந்தோம் , இன்னைக்கு வடக்க நரேந்திர மோடி பிரச்சினைக்கும், தெக்க கூடங்குளம்  பிரச்சினைக்கும் தாவிட்டோம்...


                       அடிக்கடி குரங்கிலிருந்துதான் மனிதன் வந்தான்னு நிருபிசிடுறோம்...


                     இளைகர்களே, இந்த தலைமுறை இளைகர்களிடம் சமுதாய விழிப்புணர்வு காண்கிறேன்..

                    விவேகானந்தர்,அண்ணல்,சுபாஸ் , பாரதி ,ஜான்சி ,அரவிந்தர், அன்னை தெரசா , போன்றோர்களிடம் இருந்த  வைராக்கியம் இப்ப இல்லீங்க ...

                           என்னையும் சேர்த்து தாங்க சொல்றேன்... எண்ணங்கள் தான் செயல் ஆகுதுன்னு பெரியவங்க சொல்லி நிரூபிச்சு இருக்காங்க (விவேகானந்தர்).

                     
                     தினமும் சாப்பிடற மாதிரி,தூங்கற மாதிரி ஊழல்கு எதிர்ப்ப நாலு வார்த்தை பேசுங்க / எழுதுங்க ... நாலே வருசத்துல இந்திய சுத்தமான வல்லரசு அகிடும்க,,,இது சதியம்கோ ,,,,,