Monday, 15 August 2011

என்ன செய்தாய் பாரத மாதாவிற்கு ?


பத்து மாதம் சுமந்த உன் மாதாவிடம் காட்டும் அக்கறையை உன்னை வாழ்நாள் முழுவதும் சுமக்கும் பாரத மாதாவிடம் ஏன் காட்ட மறுக்கிறாய் ? உன் உடல் அவளுக்கு சொந்தம் மறந்துவிடாதே? இன்று நீ அசுத்த படுத்தும் இடத்துலேயே நாளை நீ புதைக்க படலாம்... நினைவில் கொள்.. அல்லாவும்,இயேசுவும், சிவனும் நிலமகளின் புதல்வர்களே.. நமக்கு அம் நிலமகள் பாரத மாதா...

உன் இரத்தம் சிவப்பெனில் ,அவள்  இரத்தமும் சிவப்பு..எரிமலை இதற்கு உதாரணம் ...

அவள் இல்லாமல் நீ இல்லை.... உன் உடலே அவளின் விளைபொருள்  ,,,   ..


உன் உயிரை விட மேலானதாக மதிக்க கூடிய ஒன்று உண்டு எனில் அது  பாரத மாதாவின் மானம்..


                     ஜெய் ஹிந்த்...



                 இனிய சுகந்திரதின நாள் வாழ்த்துக்கள்..

Thursday, 4 August 2011

சமச்சீர்க் கல்வீன என்னப்பா?


கூவம் நதிக் கரையில்,

குளிர்ந்த வாடைக் காற்றில்,

குளித்த தலை அறியாத,

குழந்தை  ஒன்று கேட்டது,

குடிசையை மறந்து,

"குடி "யை மட்டுமே  மணந்த தந்தையைப் பார்த்து,

 சமச்சீர்க் கல்வீன என்னப்பா?

நேத்து ரேடியோல கேட்டேன்,

நீ வாங்கிட்டு வர சமோசா மாரி இருக்குமா?

இல்ல

அம்மா செய்யுற   களி மாரி இருக்குமா ப்பா?

Tuesday, 2 August 2011

tamil தமிழ்: தமிழ் தாய் வாழ்த்து...

tamil தமிழ்: தமிழ் தாய் வாழ்த்து...

தமிழ்த் தாய்க்கு வணக்கம் ...


                                         தமிழ்த் தாய்க்கு  வணக்கம்



அன்புள்ள நண்பர்களுக்கு,
             
                             என் தமிழ் பயணத்திற்கு இன்று பிள்ளையார் சுழி


இடுகிறேன்.. நண்பர்கள் தங்கள் மேலான ஆதரவை


தர வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
                                     




                       என்றும் அன்புடன்,
                                  .
                                    உங்கள்  தமிழ் புலவன் ....

தமிழ் தாய் வாழ்த்து...